search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவிந்த் கெஜ்ரிவால்"

    • கெஜ்ரிவால் இன்று மாலை 2 இடங்களில் ரோடு ஷோ நடத்தி ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    • மாவை 6 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியிலும் அவர் வாகன பேரணியில் ஈடுபட்டு ஓட்டு சேகரிக்கிறார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜூன் 1-ந்தேதி வரை நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது. அதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திறந்த காரில் நின்று அவர்கள் மத்தியில் கெஜ்ரிவால் கூறும் போது, "சர்வாதிகாரத்துக்கு எதிராக முழு பலத்துடன் போராடுகிறேன். ஆனால் சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற 140 கோடி மக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார்.

    ஜெயிலில் இருந்து விடுதலையான கெஜ்ரிவால் இன்று காலை கன்னாட் பிளேசில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருடன் மனைவி சுனிதா, பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மானும் உடன் சென்றனர்.

    அதை தொடர்ந்து பிற்பகலில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கிறார்.

    கெஜ்ரிவால் இன்று மாலை 2 இடங்களில் ரோடு ஷோ நடத்தி ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    மாலை 4 மணியளவில் தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியிலும், 6 மணியளவில் கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியிலும் அவர் வாகன பேரணியில் ஈடுபட்டு ஓட்டு சேகரிக்கிறார்.

    தேர்தல் பிரசாரத்துக்கு மட்டுமே அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால ஜாமின் வழங்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






    • தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்.
    • ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    அமலாக்கத்துறையின் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலின் மானைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவாலை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் "சர்வாதிகாரத்தை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். சர்வாதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மேலும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. " என பேசினார்.

    • டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான சாட்சிகளிடம் பேசக் கூடாது.
    • இடைக்கால ஜாமின் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தேர்தல் காரணமாக முன்ஜாமின் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உத்தரவில் உச்சநீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது.

    அதன்படி, இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக் கூடாது.

    தேவைப்படும் பட்சத்தில் துணை நிலை ஆளுநர் ஒப்புதலுடன் கெஜ்ரிவால் கோப்புகளில் கையெழுத்திடலாம்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பான சாட்சிகளிடம் பேசக் கூடாது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அவரது பங்கு குறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கக்கூடாது.

    இடைக்கால ஜாமின் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.

    • மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
    • ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகும் இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இன்று உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. தேர்தல் காரணமாக முன்ஜாமின் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு அமலாக்கத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் 2-ந்தேதிக்குப் பிறகும் இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பான மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், இன்று மாலைக்குள் திகார் ஜெயிலில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்டுகிறது.

    விசாரணை நடைபெற்று நீண்ட நாட்கள் கழித்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட 21 நாட்கள் மாறுபாட்டை உருவாக்கிவிடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அமலாக்க வழக்கின் தகவல் அறிக்கை 2022 ஆகஸ்ட் மாதம் பதிவு செய்துள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம்தான் கைது செய்யப்பட்டார் என நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபன்கர் தத்தா ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.

    • இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
    • ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.

    இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய பாராளுமன்ற தேர்தல் சூழ்நிலைக்கு ஜாமின் வழங்கி இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
    • இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.

    இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    • அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
    • மக்களவை தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து யோசிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவிப்பு.

    டெல்லி மாநல மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. அவர் தற்போது திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பு சார்பில் வாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் என்றால், நாங்கள் தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்வோம். அதனால் மே 5-ந்தேதி (நேற்று) இருதரப்பு தயாராக வர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    நேற்று இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது இடைக்கால ஜாமின் வழங்கினால், அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என உச்சநீதிமன்றம் அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்து. அதற்கு அவர்களும் கையெழுத்திடமாட்டார் என உறுதியளித்தது.

    அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை ஒத்தி வைத்தது. அடுத்த விசாரணை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை மார்ச் 10) அல்லது அடுத்த வாரம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.

    இந்த நிலையில் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை மே 10-ந்தேதி) இது தொடர்பான விசாரணை நடைபெறும். அன்றைய தினம் இடைக்கால ஜாமின் குறித்து உத்தரவு பிறப்பிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா? என்பது வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.

    • அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிய அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்றால், தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும். இது தொடர்பாக இரு தரப்பினரும் மே 7-ந்தேதி (இன்று) தயாராக வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அதன்படி இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தரப்பினரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். வாதங்கள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கவில்லை.

    கெஜ்ரிவால் தொடர்பான வழக்கு நாளை மறுதினம் அல்லது அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வருகிற 20-ந்தேதி வரை நீட்டித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

    • தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக கவர்னருக்கு புகார் வந்துள்ளது.
    • பா.ஜனதாவின் கட்டளையின்படி மேலும் ஒரு சதி- ஆம் ஆத்மி

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைக்காமல் உள்ளார்.

    இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs for Justice) இடம் இருந்து அரசியல் நிதி பெற்றதாக வந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் என்ஐஏ விசாரணைக்கு டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.

    இது பா.ஜனதாவின் உத்தரவு அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு எதிரான சதி என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    கவர்னர் மாளிகை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேவேந்திர பால் புல்லர் விடுதலையை எளிதாக்குவதற்கான காலிஸ்தான் குரூப்பிடம் இருந்து 16 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதாக, கவர்னருக்கு புகார் வந்துள்ளது. புகார்தாரரால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னணு ஆதாரங்களுக்கு தடயவியல் பரிசோதனை உட்பட விசாரணை தேவைப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

    டெல்லியில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தேவேந்திர பால் புல்லர். இவருக்கு தண்டனை வழங்கப்பட்டு அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தடா நீதிமன்றம் இவருக்கு 2001-ம் ஆண்டு மரண தண்டனை வழங்கியது. அதை உச்சநீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனையாக குறைத்தது.

    • அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
    • வழக்கு நேரம் எடுத்துக் கொண்டால் இடைக்கால ஜாமின் குறித்து பரிலீசனை.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது "அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எந்த தடயங்களும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் 2023-க்கு முந்தையவை. அனைத்தும் ஜூலை 2023-ல் உடையது. மணிஷ் சிசோடியா வழக்கில் உள்ள ஆதாரங்கள் அப்படியே உள்ளது" என கெஜ்ரிவால் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

    அதற்கு அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் "இந்த வழக்கு நேரம் எடுத்துக் கொண்டால், நாங்கள் தேர்தல் காரணமாக இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலிக்கலாம். 7-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இதுவரை முடிவு செய்யவில்லை.

    இரு தரப்பினரும் ஆச்சரியப்படாமல் இருக்க நாங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு இரு தரப்பிலும் தயாராகி வரவேண்டும்" கேட்டுக்கொண்டனர்.

    • விசாரணையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது.
    • கோர்ட்டு சட்ட முறைப்படியே செயல்படும்.

    புதுடெல்லி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் காணொலி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் மாணவர் அமர்ஜித் குப்தா மனு தாக்கல் செய்தார்.

    கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது என்று கூறி இம்மனுவை நேற்று டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், "தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு அரசியல் தலைவர்களை கைது செய்யக்கூடாது என்று கூறினால் வன்புணர்வு, கொலை உள்ளிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசியல் கட்சித் தொடங்க ஆரம்பித்து விடுவார்கள். இது கேலிக்கூத்தாகிவிடும்.

    விசாரணையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது. தவிர, இது கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். இதில் ஐகோர்ட் தலையிட முடியாது. ஏன் கோர்ட்டை அரசியலுக்குள் இழுக்கிறீர்கள்? ஒருவர் அவரை (அரவிந்த் கெஜ்ரிவாலை? விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார். இன்னொருவர், அவரை விடுவிக்கக் கூடாது என்று மனுதாக்கல் செய்கிறார். கோர்ட்டு சட்ட முறைப்படியே செயல்படும். நாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தனர்.

    • சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.
    • அரவிந்த் கெஜ்ரிவாலை திகாரில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பதிவியில் இருந்து விலகாத நிலையில், சிறையில் இருந்தபடியே தனது பணியை கெஜ்ரிவால் மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், டெல்லி கேபினட் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது, "மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் சந்தித்ததாகவும், அவருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், "அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் நான் அரை மணி நேரம் சந்தித்தேன். அப்போது, "மக்கள் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று அவர் கூறினார். "அவர் வலிமையானவர்" என்றும் "டெல்லி மக்களின் ஆசீர்வாதத்துடன் தனது போராட்டத்தை தொடருவேன்" என்றும் அவர் கூறினார். 

    ×